Category Archives: வண்ணதாசன் கதைகள்

ஒரு சிறு இசை

This gallery contains 18 photos.

மூக்கம்மா ஆச்சிக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடித்திருந்தது. என்ன, மலைக்கள்ளன் கதையில் பாதியையும், தாய்க்குப் பின் தாரம் கதையையும் சேர்த்து விடுவாள். மர்மயோகி கதையையும், மகாதேவி கதையையும் அப்படித்தான்.  யாராவது “என்ன ஆச்சி? எல்லா கதையையும் இப்படி குழப்புதீங்க? “ என்று கேட்டால் , “எல்லா கதையும் ஒரே கதைதான், ஆதியிலிருந்து ஒரே கதையைத் தான் ஒன்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

This gallery contains 15 photos.

வண்ணதாசன் (ஆனந்த விகடன் தீபாவளி மலர்) ஓவியம்: ஹாசிப்கான்

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனியான பின்னும் நுனியில் பூ

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த வண்ணதாசன் சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அணில் நிறம் அல்லது நிறங்கள்

This gallery contains 12 photos.

ஏற்கனவே பிய்ந்து போயிருக்கிற கோரப்பாயிலிருந்து குச்சி உருவிக் கொண்டிருக்கிற அணிலை உங்கள் தூக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவிதைகளைக் காற்றுச் சேகரித்து காலி பியர் போத்தலின் கீழ் வைக்கிறது. வேறு ஒன்று ஆக்குவதற்கும் ஆவதற்கும்தானே ஆடுகிறோம் அல்லது உரையாடுகிறோம். எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. எனக்குள்ளே இருந்துகூட இருக்கலாம். வெளியே இருந்து வருகிற வாசனைகளை உள்ளே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உதிரி

This gallery contains 9 photos.

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின், அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது……..வண்ணதாசன்

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

விசாலம்

This gallery contains 7 photos.

மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும்,சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள்…..வண்ணதாசன் ..

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

This gallery contains 1 photo.

http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்

This gallery contains 1 photo.

 MY Book review of Vannadasan’s Book ” கிருஷ்ணன் வைத்த வீடு “  for http://www.justbooksclc.com  கவிதை எழுதும் கவிஞர்களும், சிறுகதைகள்  எழுதும் எழுத்தாளர்களும் தனித்தனியே இயங்குகிற இலக்கியச் சூழலில்   கவிதை போலவே கதை எழுதும் எழுத்தாளர்கள் அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் அதில் முதன்மையானவர். கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது

This gallery contains 1 photo.

மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.                 ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் ஆயிரம் வேலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாசியின் குழந்தையைப்பார்த்துவிடுவது என்பது ஏற்கனவே தீர்மானித்த ஒன்றுதான். மாசி அவ்வளவு தூரத்துக்குச் சொல்லி இருந்தார்.                 மாசி தனியாக வீட்டுக்குவருவதே அபூர்வம். வந்ததே இல்லை என்றுகூடச் சொல்லலாம். கூச்சமா என்ன காரணம் என்று தெரியவில்லை. அநேகமாக வெளியூரில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் (அநேகமாக வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளுமே எனக்கு மனப்பாடம். அவரது கதைகளிலேயே என் மனதுக்கு நெருக்கமான சிறுகதையாக நான் கருதுவது, ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ என்ற கதையைத்தான். வண்ணதாசன் தனது சிறுகதைகளில் பெரும்பாலும் கதை சொல்ல முனையமாட்டார் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம். நினைவிலிருந்தே என்னால் சொல்ல முடிகிற ஒரு நல்ல கவிதை, இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சினேகிதிகள்

This gallery contains 13 photos.

உயிர் எழுத்தின் முக்கியமான சிறப்பு அது படைப்பிலக்கியத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதே. குறிப்பாக அதில் வரும் சிறுகதைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. புதிய படைப்பாளிகள் அதிகமாக எழுதும் இதழாக உள்ளது அது. பல கதைகள் தொடக்க முயற்சிகள். ஆயினும் இது முக்கியமான ஒரு போக்குதான். இவ்விதழில் வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தொடர்ச்சி- ஒளியிலே தெரிவது

This gallery contains 10 photos.

மதிப்புகள் valueக்கள் என்றெல்லாம் யோசித்தால் இவையெல்லாம் என்ன? எந்தத் தத்துவ இழைகளின் முடிச்சில் இந்த அனுபவ உண்மைகளைக் கட்டித் தொங்கவிட. வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லை என்று நான் நிரூபிக்க முற்படுகிறேனா? எந்த நிரூபணங்களையும் நோக்கி என் வரிகளை நகர்த்தவேயில்லை நான் தண்ணீரற்றுத் தவித்துக் கிடக்கையில் உனக்கென்ன இத்தனை சொரிவு என்று குல்மோஹர் மரங்களை யாரும் கேட்டதுண்டா? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒளியிலே தெரிவது – சிறுகதை

This gallery contains 15 photos.

தத்துவம், முற்போக்கு, Comitted, Non-Comitted என்ற எல்லாவார்த்தைகளையும் தள்ளிவிட்டு என் எல்லா படைப்புகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்தால் அதன் கலாப்பூர்வமான வெற்றி தோல்வியுடன், அழகியல் சாய்வுகளுடன் எல்லாம்கூட, என் மனிதர்கள் யார் என்று தெரியும். இதுதான் என் வாழ்க்கையில் சாத்தியம் என்று தோன்றுகிறது………வண்ணதாசன் அடுத்த பகுதியில் முடியும்…….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெய்தலும் ஓய்தலும்

This gallery contains 10 photos.

ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது.இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத்தொட்டுக் தொட்டு நாம் எழுதிக்கொண்டு போகிறோம்?………வண்ணதாசன் எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

காணாமல் போகும் வாய்கால்கள்

This gallery contains 13 photos.

முன்னறிவிப்புக்களை எல்லாம் தாண்டி மழைபெய்து கொண்டிருக்கிறது. ஐப்பசி கார்த்திகை அடைமழை தவிர, காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் நகர்வுகளால் உண்டாகிற மழை. மூன்று நாட்களின் தொடர் மழைக்குப் பிறகு இன்று தான் ஓயத் துவங்கிறது. எனக்கு ஓய்ந்து போகச் சம்மதமில்லை.………  வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

WINDOW

This gallery contains 8 photos.

Vannadasan

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கூறல்

This gallery contains 7 photos.

‘’வாழ்ந்ததைக் காட்டிலும் வாழவேண்டியது அதிகமிருப்பதாகவும் பெற்றதைவிட இழந்துவிட்டது அனேகம் என்றும் நான் நினைத்ததில்லை. ஆனால் எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பது போலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது’’-வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்