Tag Archives: அகமும் புறமும்

மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art?artfrm=read_please “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்…” – இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நிலா பார்த்தல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   இப்போது எத்தனை பேர் நிலா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அல்லது ஏற்கனவே இன்று நிலா பார்த்தீர்கள்? நான் எப்போதெல்லாம் இப்படி ஒரு பௌர்ணமி நிலவைப் பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் யாரையாவது அதைப் பார்க்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். மதுரை பிச்சைப்பிள்ளைச் சாவடியில் பார்த்த நிலாவை ரவிசுப்ரமணியனைப் பார்க்கச் சொன்னேன். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்த்த நாட்கள் ஒன்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பிரதிபலிக்கும் நிஜ மாயை

This gallery contains 9 photos.

என்னுடைய 86 ஆண்டுகால வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்க்கும் பொழுது , தொடக்கத்தில் சிறுகதை ஆசிரியன் , கவிஞன் , மொழிபெயர்ப்பாளன் என்று கலை , இலக்கியத்தின் ஏணிப்படிகளில் ஒவ்வொன்றாக ஏறி , 2000 ஆண்டுக்கான மைய அரசின் திறனாய்வுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற பின் , கடந்த 20 ஆண்டுகால என்னுடைய வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஏக்கக் கடல்

This gallery contains 7 photos.

  எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,  எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?  அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,  முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,  எத்தனை ஊர்,  எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?  நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது  நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,  … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் அகமும் புறமும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் உலகத்திலேயே அழகானவர்கள் யார் என்று கேட்டால், நரிக்குறவர்கள்தான் என்று சொல்வேன். பிறந்ததில் இருந்து அவர்கள் வளர வளர அழகாகிக்கொண்டே போகிறார்கள். சமீபத்தில், ஆனித் திருவிழாக் கூட்டத்தில் ஒருத்தரைப் பார்த்தேன். பழுத்த பழம் மாதிரி! ஒரு குச்சி ஐஸை வாங்கி தான் ஒரு வாய் உறிஞ்சி, தன் கையிலுள்ள பேரனுக்கு ஒரு வாய் கொடுக்கிறார். அவரின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

போட்டோ

  வண்ணதாசன்

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?

வண்ணதாசன் நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா? நான் கண்டேன். சாதாரணமான கனவு அல்ல, புலிகள் நடமாடுகிற கனவு. மெத்து மெத்தென்ற மஞ்சள் முதுகும், வரிகளும், வால் சுழற்றலுமாக எங்கள் வீட்டு மாடி மீது அவை நடமாடுகின்றன. எங்கள் வீட்டில் அது வாடகைக்கு இருக்கிறதா, அல்லது அதிக வாடகை வரும் என்று கீழ்த் தளத்தை எங்களுக்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

ஆர்வங்களின் ஊற்றுக்கண்

வண்ணதாசனின் “அகமும் புறமும்” …

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இருபத்திரெண்டு வருஷம் என்ன, இருநூறு வருஷம் ஆனால் கூடச் சில பேரை மறந்துவிட முடியாது. சில விஷயங்களை மறந்து விடமுடியாது. ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்” என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.    முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு‘ என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.    இளம் பச்சையில் ஒரு சால்வையைச் சரிபண்ணிக்கொண்டு கும்பிட்டபடி வருகிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கிரஹப் பிரவேசம்

கிரஹப் பிரவேசம் வண்ணதாசன் இப்போது இருக்கிற வீடு பெரியதோ,சிறியதோ…எப்படி இருந்தாலும் நாம் பால்ய காலத்தில் வாழ்ந்த ஒரு வீட்டின் ஞாபகத்துக்குள் நடமாடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த வீட்டின் ஏதோ ஓர் அறை, அறைகூட அல்ல; அறையின் ஒரு மூலை, எங்களுடைய 21.இ சுடலைமாடன் கோயில் தெரு  வீட்டை ஞாபகப்படுத்திவிடாதா என்று தான் தோன்றுகிறது. இந்த வீட்டு அலமாரியைத் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா?

வண்ணதாசன் நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை  மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா? உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா? நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பற்களின் தேவதை….டூத் ஃபெய்ரி!

வண்ணதாசன் அகமும் புறமும்

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திரும்பி வராத தினத்தில்….

வண்ணதாசன் பல தினங்களுக்கு முன், என் நண்பருடைய வீட்டில் தங்கி இருந்தேன். வாரக்கணக்கில் எல்லாம் அல்ல; இரண்டு இரவுகள், ஒரு பகல் என்று வைத்துக்கொள்ளலாம். தினங்களின் எண்ணிக்கை அல்ல… அவற்றின் அடர்த்திதானே முக்கியம்! வாதா மரத்தைப் போல் இலைகளையே பூவாக ஆயுள் முழுவதும் காட்டியபடி எத்தனையோ மரங்கள் நிற்க, இந்தச் செம்பருத்தி மட்டும் தினசரி நான்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்: உள்ளங்கை எழுத்து-   எஸ்.ராமகிருஷ்ணன்   ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை. ‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?” இந்தக் கேள்வி காதில் விழுகையில் நான் ஏழுவளவு தாண்டி, திருநாவுக்கரசு மாமா வீடு தாண்டிப் போய்க்கொண்டு இருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீடு இருக்கிற தெருவில் ரொம்ப வருடங்கள் கழித்து நடந்து போகிறவனுக்கு என்னவெல்லாம் மனதுக்குள் நிகழுமோ, அவ்வளவும் என்னுள் நிகழ்ந்துகொண்டு இருந்தது. மேட்டு வீடு என்றும், மாம்பழக் கடை ஆச்சி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

என் கையில் விழுந்த சாக்லேட்!

என் கையில் விழுந்த சாக்லேட்! “வண்ணதாசன்” எழுதிய “அகம், புறம்” அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன். “பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரம்

மரம் எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால், சீட்டுக்கட்டு க்ளாவர் மாதிரி இருக்கும். எத்தனையோ வருஷங்களாக அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் ஒரு சாயலில் அது பச்சை க்ளாவர்தான். முன்பைவிட அடர்த்தியாக, அழகாக, கிளையும் இலையுமாக இருக்கிறது. அறுபது வருடங்களில் நமக்கு என்னவெல்லாம் ஆகிவிடுகிறது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை. செழிப்பாக இருந்தது. வாலிபம் திரும்பின … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘அபிதா’

நான் பழுத்திருந்தபோது பழம் கடிக்க வராமல் உளுத்துவிட்டதும் புழு பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி நீ!’ – இதை நான் எழுதி இருபத்தைந்து வருடங்கள்கூட இருக்கலாம். கவிதைக்கு ‘அபிதா’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தேன். லா.ச.ரா-வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக்-கிடக்கிற லா.ச.ரா–வின் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்