வீடு

 
முழுதாக இருக்கும்போது
கவனத்தில் விழவில்லை
இடிந்து கிடக்கும்போது
இம்சை படுத்துகிறது
யாருடையதாகவோ
இருந்த வீடு
…………………………………………………………………………….கல்யாண்ஜி

 

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வீடு

  1. நாங்கள் முன்பு குடியிருந்த ஓட்டுவீடும் இப்படித்தான் இடிந்து கிடக்கிறது. இன்று பார்க்கும் போது கூட பழைய நினைவுகள் வந்து வலியை ஏற்படுத்துகிறது. அற்புதமான கவிதை. நன்றி.

  2. s.raajakumaran சொல்கிறார்:

    வீடு வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல.
    முந்தைய தலைமுறையின் மூச்சுக்காற்றால்.
    லட்சக்கணக்கான உணர்வுக் கலவையினால்.
    எண்ணிலடங்காத பெருமூச்சுகளால்.
    கோடிமுறை நடந்தடங்கித் தேய்ந்து போன
    காலடிச்சுவடுகளால்..

    எத்தனை முறை வாசித்தாலும்-எழுதினாலும்
    தீராநதிப் பெருக்காக நீண்டுகொண்டே இருக்கிறது
    வீடு பற்றிய சித்திரங்கள்…

    இக்கவிதை எனது தளத்தெரு-அம்மா வீட்டையும்,வயலூரின் அப்பா வீட்டையும்
    சட்டென இழுத்து வந்து எனக்குள் வசிக்கச் செய்கிறது.அதோடு என் நதியோடிய காலம் தொகுப்பிலுள்ள ஒரு சிறுகவிதையையும் ஞாபகமூட்டுகிறது…

    வீட்டை விற்று
    வெகு காலத்திற்குப் பின்னும்
    அந்த வீட்டை
    நம்ம வீடு என்றே
    அழைத்துக் கொண்டிருக்கிறது
    அம்மா…
    -நேசமிகு ராஜகுமாரன்

  3. kumky சொல்கிறார்:

    ஹூம்…
    வீடென்றால் வீடு மட்டுமேவா..

    இப்படியான வாழ்ந்து கெட்ட வீடொன்றில்
    வாழ்ந்திருக்கும்போது பிறந்து வளர்ந்த
    வாழ்வு இன்னமும் தங்கிக்கிடக்கிறது
    கெட்ட பின்னான வீட்டின் வாழ்ந்த நினைவுகள்
    சதா காலமும் உறுத்தியபடி.

  4. Bar-Code (@kaeswar) சொல்கிறார்:

    இதை இப்படியே விடு
    என்று
    சொல்ல யாரால் முடியும் ?
    முடியாமல் போனவர்கள்
    சொல்லாமல் விட்டதை
    நாம் இங்கே சொல்லி
    என்னவாக போகிறது!
    விடு இப்படியே இதை

  5. Pena Manoharan சொல்கிறார்:

    வீடு காலந்தோறும் மனிதனைக் கட்டிப்போடுகிறது அல்லது விடுதலை செய்கிறது.என்னிடமுமுள்ள வீடு பற்றிய சித்திரங்களையும்,மனப்பதிவுகளையும் கிளர்துகிறத் இந்தக்கவிதை.

பின்னூட்டமொன்றை இடுக