இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…
நம் அனைவருக்கும் சொந்தமானவர்.
இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
Join 313 other subscribers
நாங்கள் முன்பு குடியிருந்த ஓட்டுவீடும் இப்படித்தான் இடிந்து கிடக்கிறது. இன்று பார்க்கும் போது கூட பழைய நினைவுகள் வந்து வலியை ஏற்படுத்துகிறது. அற்புதமான கவிதை. நன்றி.
வீடு வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல.
முந்தைய தலைமுறையின் மூச்சுக்காற்றால்.
லட்சக்கணக்கான உணர்வுக் கலவையினால்.
எண்ணிலடங்காத பெருமூச்சுகளால்.
கோடிமுறை நடந்தடங்கித் தேய்ந்து போன
காலடிச்சுவடுகளால்..
எத்தனை முறை வாசித்தாலும்-எழுதினாலும்
தீராநதிப் பெருக்காக நீண்டுகொண்டே இருக்கிறது
வீடு பற்றிய சித்திரங்கள்…
இக்கவிதை எனது தளத்தெரு-அம்மா வீட்டையும்,வயலூரின் அப்பா வீட்டையும்
சட்டென இழுத்து வந்து எனக்குள் வசிக்கச் செய்கிறது.அதோடு என் நதியோடிய காலம் தொகுப்பிலுள்ள ஒரு சிறுகவிதையையும் ஞாபகமூட்டுகிறது…
வீட்டை விற்று
வெகு காலத்திற்குப் பின்னும்
அந்த வீட்டை
நம்ம வீடு என்றே
அழைத்துக் கொண்டிருக்கிறது
அம்மா…
-நேசமிகு ராஜகுமாரன்
ஹூம்…
வீடென்றால் வீடு மட்டுமேவா..
இப்படியான வாழ்ந்து கெட்ட வீடொன்றில்
வாழ்ந்திருக்கும்போது பிறந்து வளர்ந்த
வாழ்வு இன்னமும் தங்கிக்கிடக்கிறது
கெட்ட பின்னான வீட்டின் வாழ்ந்த நினைவுகள்
சதா காலமும் உறுத்தியபடி.
இதை இப்படியே விடு
என்று
சொல்ல யாரால் முடியும் ?
முடியாமல் போனவர்கள்
சொல்லாமல் விட்டதை
நாம் இங்கே சொல்லி
என்னவாக போகிறது!
விடு இப்படியே இதை
வீடு காலந்தோறும் மனிதனைக் கட்டிப்போடுகிறது அல்லது விடுதலை செய்கிறது.என்னிடமுமுள்ள வீடு பற்றிய சித்திரங்களையும்,மனப்பதிவுகளையும் கிளர்துகிறத் இந்தக்கவிதை.