Category Archives: மணலுள்ள ஆறு

மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா

This gallery contains 1 photo.

புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வரைபடம்

This gallery contains 1 photo.

    வாசலில் வந்துநின்று கெஞ்சிய விற்பனைப் பெண்ணிடம் வாங்கியது அந்த உலக வரைபடம். படுக்கையறைத் தலை மாட்டில் தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து நம் ஊர் எங்கே என்றாள். நம் வீடு இருக்கும் இடம் எது என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை. அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி மேற்கொண்டு என்னிடம் கேட்பதில் பயனில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அவரும் நானும்

This gallery contains 2 photos.

  சந்தடியற்ற ரயில் நிலையத்தில் பரிச்சயமற்ற அவரும் நானும். ‘இந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார். ‘ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள் அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’ என்றேன். அவர் இறந்த காலத்தில் குனிந்து பழுப்பு இலைகளைப் பொறுக்க, நான் மூச்சிழுத்து நுகர்ந்துகொண்டிருந்தேன் பறந்து போன எச்சச் சொட்டுகளை, தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க. …………………………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெயில் முடிவு

This gallery contains 1 photo.

ஒரு முடிவு செய்தது போல் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டிருந்தது செடி. ஒரு முடிவும் செய்ய முடியாதது போல் செடியடியில் அசையாதிருக்கிறது சாம்பல் பூனை. ஒரு முடிவும் செய்ய அவசியமின்றி ஊர்ந்துகொண்டே இருக்கிறது செடியின் மேல் வெயில். ………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நகர்வு

This gallery contains 2 photos.

    ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு  என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. ……………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எளிய கேள்விகளின் மேல்

This gallery contains 2 photos.

    சாய்ந்து வளர்ந்து பூச்சொரியும் சிவப்பு மரமல்லி மரம் தன் கிளைகளைப் பாதிக்கு மேல்  தெருவுக்குத் தர அனுமதித்து சுற்றுச் சுவரை இடித்துவிட்ட கருணைமிக்கவர் யார் இந்த வீட்டில்? சதா யாருடனாவது பேசிக்கொண்டே பழுதுற்ற கண்ணுடன் சூரியன் பார்த்துச் சிரிக்கும் முதிய காவலரின் கனவில் சமீபத்தில் அம்மன்புரத்துப் பனைவிடலி அசைந்ததுண்டா? ஏழு செவலைக்குட்டிகளுக்கும் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யாரிடம்

This gallery contains 1 photo.

    அவுரிச் செடி மூட்டில் அமர்ந்திருக்கும்  இப் பறவையின் பெயர் என்னவென யாராவது கேட்டால் சொல்லிவிடலாம். பெயர் தெரிந்தது போல் எல்லோரும் பெயர் தெரியாத பறவையைத் தாண்டிப் போய்க் கொண்டிருகிறார்கள். யாரிடமாவது சொல்வதற்குள் பறந்துவிட்டதெனில் யாரிடம் சொல்வேன் செம்போத்து எனும் பெயரை? ……………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மீதியிருக்கும் விரல்கள்

This gallery contains 1 photo.

வீட்டுக்கு வந்திருந்த குட்டிப் பெண்ணுக்கு தரையில் இடது கை விரித்து சாக்பீஸால் விரல்கள் வரைந்தேன் சுண்டு விரல், மோதிர விரல் வரைந்த எனக்கு, சாலை விபத்தில் இறந்த யாரோ ஒருவரைச் சுற்றிய தடயக் கோடுகளின் வெள்ளை ஞாபகம் வந்தது. அந்தக் குட்டிப் பெண்ணுக்கும் அப்படித் தோன்றுமோ என்ற பயத்தில் எப்படி வரைய மீதியிருக்கும் எல்லா விரலகளையும்? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நான்காவது

This gallery contains 1 photo.

  இல்லாத ஒரு நான்காவது நாயுடன் விளையாடுவது போல புரண்டுகொண்டு இருக்கின்றன காலை வேம்பின் கசப்பு நிழலில் மூன்று நாய்கள் …………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இரண்டு யாரோக்கள்

This gallery contains 1 photo.

  யாரோ தயாரித்த பானம். யாரோ அருந்திய குவளைகள். இரண்டு யாரோக்களின் இனிப்பையும் மொய்க்கின்றன கருப்பு எறும்புகள் ஒரே சமயத்தில். …………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மணலுள்ள ஆறு

This gallery contains 1 photo.

ஆச்சி இறந்து அனேக காலம் ஆயிற்று. அவளுடைய மர அலமாரியில் வேறெதையோ தேடுகையில் கிடைத்தது ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும் அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும். எந்த ஆற்றில் அவள் குளிக்கையில் தவறி விழுந்ததோ, எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக ஒட்டிய மணல் சோப்பில். தெரியாமல் போயிற்று இத்தனை காலமும் ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது மர … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பழுப்பு

This gallery contains 1 photo.

அசையாமல், இறுக்கமாக அடர்ந்த மரத்தில் துளிர் இலை. உதிர்தலைக் கொண்டாடியபடி கிளையைப் பிரிந்து சுழன்று சுழன்று இறங்குகிறது ஒரு பழுத்த இலை. ……………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இடைப்பட்ட

This gallery contains 1 photo.

    ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடைப்பட்ட உப்புத் தூரம் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடைப்பட்டது என இறுதியாகப் பொன்மொழிந்து வலைக்குள் கடலைக் கடைசியாகப் பார்த்த கண்களுடன் ஒரு மீனுக்கும் இன்னொரு மீனுக்கும் இடைப்பட்ட மீன் …………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எந்த நொடியிலும்

This gallery contains 1 photo.

எந்த நொடியிலும் என்னை நீயோ உன்னை நானோ முத்தமிடக் கூடியதாகவே இருந்தது. நிழல்கள் பெருக்கும் அந்தியில் இந்த அறைக்குள் வந்து நாம் அமர்ந்தபோது திரைச் சீலையின் சின்ன நகர்வோ நம்மில் யாரோ ஒருவர் நாற்காலியை நகர்த்திய நறநறப்போ, ரோமன் எண்களில் நிலைகுத்தி நிற்கும் கடிகாரமோ ஏதோ ஒன்றுதான் பொறுப்பேற்கவேண்டும் நம் கையில் இவ்வளவு கூர்மையான ஆயுதங்களைத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதி.

This gallery contains 1 photo.

ஈஸ்டர் மறுதினத்தில் புடைத்துத் தொங்கும் இந்த அவுரி விதை நெற்று எண்பது வருடங்களுக்கு முன்பு என் தாத்தாவின் நிலத்தில் மஞ்சட் பூங்கொத்தாக அசைந்திருந்தது, அவற்றின் ஆதி மகரந்தம் ஒட்டிய கால்களுடைய பட்டாம் பூச்சியொன்று இன்னும் சிறிது நேர வெயிலில் பறக்கத் துவங்கிவிடும்நான் பார்க்க இன்று. உயிர்த்தெழும் விதை பாடக் கூடும் ஒரு உன்னதப் பாட்டு. ………………………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காக்கைமை

This gallery contains 1 photo.

    புங்கை மரத்தடியில் ஒரு காக்கைக் குஞ்சு எறும்பு அரித்துக் கிடந்தது பாவமாய். காது மூக்கு தொண்டை மருத்துவர் கட்டுகிற வீட்டுச் செங்கல் பக்கம் இரட்டைச் சிசுக்களின் மரணம் போல இறந்து இடந்தன மேலும் இரண்டு. அன்றைக்கும் இன்றைக்கும் மருந்துக்குக் கூட எந்தக் காக்கையும் கத்தவே இல்லை. அணிலை விரட்டிச் சோறு கொத்தின. தேங்காய்ச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கடலற்ற கணத்தில்

This gallery contains 1 photo.

  கடலைச் சமீபத்தில் கனவில் கூடப் பார்த்ததில்லை. படகின் வெளிப்புறத்தில் படிந்திருந்த அடுக்கடுக்கான ஆயிரம் கால அலைகளை எப்போதோ ஒருமுறை தொட்டிருக்கிறேன். சிகிச்சைக்குள்ளாகும் சினேகிதியின் உலர்ந்த கண்களை ஒருவேளை இறுதிமுறையோ எனப் பார்த்த பதற்றத்தில் வெளியேற, மருத்துவ மனைக்கு எதிர்ச் சிறகில் அசைந்தசைந்து தவிக்கிறது கடலற்ற கணத்தில் ஒரு கட்டு மரம். ……………………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிகழக் காத்திருப்பது

This gallery contains 3 photos.

வாழ்க்கைக்கு எது எல்லாம் தேவையோ, அல்லது போதுமோ அது அவற்றுக்கும் பொருந்தும். ஒன்றின் ஜீவன் மற்றொன்றில் இருக்கிறது. எதுவும் வேறு வேறில்லை. எல்லாம் புரியும் தினம் வரும். எல்லாம் தானாகப் புரியவும் செய்யும். அந்த நேரம் முன் & பின் எனினும் அருமையானதாக இருக்கும். எனக்கு எதிர்த்தாற் போல உன்னதமான மனிதர்கள் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்….கல்யாண்ஜி எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்