விசாலம்

This gallery contains 7 photos.

மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும்,சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள்…..வண்ணதாசன் ..

More Galleries | | 2 மறுமொழிகள்

என் இரு ஆசான்கள்

This gallery contains 1 photo.

 ∞கைகள் அள்ளிய நீர்∞ சுந்தர்ஜி என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன். என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியவை இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான். பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

This gallery contains 1 photo.

http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

This gallery contains 6 photos.

ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, … Continue reading

More Galleries | | 5 மறுமொழிகள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா

This gallery contains 1 photo.

புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

இதற்க்குமேல்

This gallery contains 2 photos.

More Galleries | | 3 மறுமொழிகள்