This gallery contains 1 photo.
2011 முடிய வண்ணதாசனின் வலைப்பூவின் நிகழ்வுகளைக் காண வாசகர்களை 2012 புத்தாண்டு வாழ்த்துக்களோடு அழைக்கிறேன் http://vannathasan.wordpress.com/2011/annual-report/
This gallery contains 1 photo.
2011 முடிய வண்ணதாசனின் வலைப்பூவின் நிகழ்வுகளைக் காண வாசகர்களை 2012 புத்தாண்டு வாழ்த்துக்களோடு அழைக்கிறேன் http://vannathasan.wordpress.com/2011/annual-report/
This gallery contains 1 photo.
http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். … Continue reading
This gallery contains 6 photos.
ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, … Continue reading
This gallery contains 1 photo.
http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading
This gallery contains 1 photo.
புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading
. . http://www.natpu.in/?p=4359 அன்புமிக்க பாமரன், வணக்கம். . உலகத்தில் பாமரன் என்று சொல்லப்படுபவர்களும் அழைக்கப்படுகிறவர்களும் எல்லாம் உங்களைப் போல இவ்வளவு கூர்மையும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பாரதிய வித்யாபவன் வாசலில் நெஞ்சில் இருக்க உங்களையும்,. உங்கள் மகன் சேகுவேராவையும் இன்னும் பெயர் மறந்துபோன, முகம் தங்கியிருக்கிற மேலும் சில மனிதர்களையும் … Continue reading
This gallery contains 1 photo.
MY Book review of Vannadasan’s Book ” கிருஷ்ணன் வைத்த வீடு “ for www.justbooksclc.com கவிதை எழுதும் கவிஞர்களும், சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர்களும் தனித்தனியே இயங்குகிற இலக்கியச் சூழலில் கவிதை போலவே கதை எழுதும் எழுத்தாளர்கள் அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் அதில் முதன்மையானவர். கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் … Continue reading
This gallery contains 29 photos.
கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. . உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் … Continue reading
This gallery contains 1 photo.
சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில் http://koodu.thamizhstudio.com/saral_award_4.php
This gallery contains 10 photos.
உலக சரித்திரத்தைக் கூட எளிதாய் எழுதிவிடலாம் போல. மிக்க் கடினமானது மிக நெருக்கமாக உணர்கிற ஒருவரைப்பற்றி இப்படி ஒரு சிறு குறிப்பு எழுதுவது.ஒரு வரிகூட இல்லாமல் ஒரு முழு வெள்ளைப் பக்கத்தை விட்டு விடுவதுதான் சரியாக இருக்கும். இந்த சமீபத்திய எட்டு, ஒன்பது ஆண்டுகளில் என்னை மிகவும் புரிந்திருக்கிற, நான் மிக அதிகம் அந்தரங்கமாக என்னையும் … Continue reading
This gallery contains 1 photo.
http://uyirmmai.blogspot.com/2005/02/5.html பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது ஆவி பறக்கிற உன் காமம். பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற வக்கிரம் அனைத்தையும் உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது. காணாமல்போன சீப்பைமுன் வைத்து நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம். மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு நீர் வார்க்கிறது உன் முத்தம். விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை என் வாயோரங்களிலிருந்து துடைத்துக் … Continue reading
This gallery contains 1 photo.
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906 31-10-2006 அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு, வணக்கம். சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும்,நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் கஷ்டமாக உணர்ந்தது இல்லை. நாளைக்குப் போய்ச் சேர்ந்து தொலைபேசுகிறவரை, இந்த மழைக்காலத் தவளைகளின் சேர்ந்திசையைக் கேட்டுக்கொண்டு இருக்க … Continue reading
This gallery contains 1 photo.
வாசலில் வந்துநின்று கெஞ்சிய விற்பனைப் பெண்ணிடம் வாங்கியது அந்த உலக வரைபடம். படுக்கையறைத் தலை மாட்டில் தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து நம் ஊர் எங்கே என்றாள். நம் வீடு இருக்கும் இடம் எது என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை. அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி மேற்கொண்டு என்னிடம் கேட்பதில் பயனில்லை … Continue reading
This gallery contains 1 photo.
மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் ஆயிரம் வேலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாசியின் குழந்தையைப்பார்த்துவிடுவது என்பது ஏற்கனவே தீர்மானித்த ஒன்றுதான். மாசி அவ்வளவு தூரத்துக்குச் சொல்லி இருந்தார். மாசி தனியாக வீட்டுக்குவருவதே அபூர்வம். வந்ததே இல்லை என்றுகூடச் சொல்லலாம். கூச்சமா என்ன காரணம் என்று தெரியவில்லை. அநேகமாக வெளியூரில் … Continue reading
This gallery contains 2 photos.
சந்தடியற்ற ரயில் நிலையத்தில் பரிச்சயமற்ற அவரும் நானும். ‘இந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார். ‘ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள் அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’ என்றேன். அவர் இறந்த காலத்தில் குனிந்து பழுப்பு இலைகளைப் பொறுக்க, நான் மூச்சிழுத்து நுகர்ந்துகொண்டிருந்தேன் பறந்து போன எச்சச் சொட்டுகளை, தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க. …………………………………………………………………………………………கல்யாண்ஜி
This gallery contains 8 photos.
கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. . உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் … Continue reading