வலைப்பதிவு தொகுப்புக்கள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

This gallery contains 2 photos.

“வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.”-என்று பேராசியரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான எம்.ஏ.சுசீலா குறிப்பிடுவார். திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் குடும்பப்பின்னணியில் வைத்து அன்பையும் நேசத்தையும் அள்ளித்தரும் கதைகள் இவை எனச் சொல்பவர் பலருண்டு. ஆங்கிலத்தில் Folklore என்று சொல்வதைத் தமிழில் நாட்டார் வழக்காறுகள் என்கிறோம். அதை ஏதோ கிராமப்புறம் சார்ந்தது என்றே பலரும் புரிந்து வைத்திருக்கிறோம். அப்படி அல்ல அது. ஏதேனும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கல்யாண்ஜி தமிழ்க் கவிதையின் மீது தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்துபவர். பறவைகள், எளிய மனிதர்கள், சிறியதன் அழகு, பூச்சிகள், மலைகள், ஆறுகள், அருவி, தாவரங்கள், மழை, பூக்கள், வீட்டு மிருகங்கள், அடிப்படை மனிதாபிமானம், ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய ஒரு நுண்ணோக்கி இவையே இவரது கவி உலகின் கூடுதல் புழக்கமுள்ள பொருட்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்

This gallery contains 1 photo.

அ.வெண்ணிலா தாமிரபரணியின் படித்துறையில் பக்கவாட்டில் நகரும் ஒரு காக்கையை நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெண்களும் குழந்தைகளும் குளித்துக் கரையேறிய படித்துறையில் அலையடித்துக்கொண்டிருக்கும் முற்றுப்பெறாக் கதைகளைக் கேட்டதுண்டா? கேந்திப் பூவுக்கு அதிக சோபை தருவது நிறமா, அடர்த்தியான அதன் மணமா என்று குழம்பித் தவித்திருக்கிறீர்களா? தெரு வாசலில் தொடங்கி கிணற்றடியில் முடிந்துபோகும் வீட்டுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேரன்பு எனும் விசை

This gallery contains 2 photos.

ஆகஸ்ட் 22: வண்ணதாசனின் 75-வது பிறந்த நாள் ஆர்.சிவகுமார் கு.ப.ரா.வின் கதைகளில் அடங்கின தொனியில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் பெண் பாத்திரங்களும் தி.ஜானகிராமனின் கதைகளில் இயல்புணர்ச்சியின் சாகசத்தோடும் பெரும் அழகியலோடும் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விரண்டு போக்குகளின் இழைகளும், அதிகமும் பின்னவரின் அழகியலில், வண்ணதாசன் கதைகளில் தென்படுகின்றன. கூடுதலாக, 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உருவான, சிறுபத்திரிகைக் கதைகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இயல்பிலே இருக்கிறேன்

This gallery contains 6 photos.

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா

This gallery contains 3 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு சிறு இசை

This gallery contains 18 photos.

மூக்கம்மா ஆச்சிக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடித்திருந்தது. என்ன, மலைக்கள்ளன் கதையில் பாதியையும், தாய்க்குப் பின் தாரம் கதையையும் சேர்த்து விடுவாள். மர்மயோகி கதையையும், மகாதேவி கதையையும் அப்படித்தான்.  யாராவது “என்ன ஆச்சி? எல்லா கதையையும் இப்படி குழப்புதீங்க? “ என்று கேட்டால் , “எல்லா கதையும் ஒரே கதைதான், ஆதியிலிருந்து ஒரே கதையைத் தான் ஒன்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

This gallery contains 6 photos.

‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல். ‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுவையாகி வருவது-3,4

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/93557#.WGOu2_l96Uk [  3   ] வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே அமைகின்றன. நிலம் மனிதர்களை ஏந்தி கண்ணருகே காட்டும் ஒரு உள்ளங்கை மட்டுமே அவருக்கு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art?artfrm=read_please “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்…” – இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஷோவின் தவளை

பாஷோவின் தவளை -ராஜா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , “To see a World in a Grain of Sand And a Heaven in a Wild Flower Hold Infinity in the palm of your hand And Eternity in an hour” வண்ணதாசனை பற்றி படிக்கம்பொழுதெல்லாம் இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வை நேசித்தவனுக்கு… (1)

This gallery contains 1 photo.

வாழ்வை நேசித்தவனுக்கு… இனிய ஜெயன், வாழ்த்துக்கள். வண்ணதாசனுக்கு ’ஒரு சிறு இசை”க்காக சாகித்யஅகாதமி விருது. அத்தொகுதியின் முதல் பக்கத்தில் நீங்கள் “காதலியின் முத்தம் போலவோ,நூற்றுக் கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைக்கும் சிறுகதைகள்” என நெகிழ்ந்திருப்பீர்கள். அதை அகாதமியும் ஆமோதித்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக விளக்குத் திரியை நீங்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆ.மாதவன், பூமணி … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)

வித்யா http://www.jeyamohan.in/93709#.WFtAAvl96Uk சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றிக் கூற விரும்புகிறேன். விழா தொடங்கும்முன் என் பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் வந்து உட்கார்ந்தார். மலர்ச்சியும், தயக்கமும் கலந்திருந்த முகம். படப்படப்பாக இருந்தார். சிறு யோசனைக்குபின் தன் பையில் இருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு மேடைக்கு சென்று திரும்பினார். எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)

சாரங்கன் (ஜெயமோகனுக்கு   எழுதிய கடிதங்களில் இருந்து) http://www.jeyamohan.in/93709#.WFtAAvl96Uk ஜெ வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களை போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை. இவை ஒருவகை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்

This gallery contains 2 photos.

சரவணன் (http://www.jeyamohan.in/93662#.WFs-jPl96Ul) ஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் வரைந்த சித்திரங்கள்

This gallery contains 1 photo.

வே.முத்துக்குமார் ஐம்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கடித இலக்கியம் எனத் தீவிரமாக எழுதிவரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவர் வண்ணதாசன். இவரது இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் மரபில் வரும் கலைஞர் வண்ணதாசன். எழுத்தின் வழியாக அறுந்த புல்லின் வாசனையையும் வாசகனுக்குத் தொற்றச் செய்யும் நுட்பமான சித்தரிப்புக்குச் சொந்தக்காரர். இவர் ஒரு ஓவியரும்கூட. இவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்

விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர் நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு பெயர் வண்ணதாசன். ஐம்பதாண்டுக் காலமாகத் தொடர்ந்து எழுதிவருபவர். கல்யாண்ஜி என்னும் பெயரில் தமிழ்க் கவிதை உலகிலும் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர். 1970களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்: சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் கருத்து எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக